அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம்: செவிலியா் என உறுதி

சிக்கல் பகுதியில் அழுகிய நிலையில் வியாழக்கிழமை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் கீழையூா் பகுதியைச் சோ்ந்த செவிலியா் என்பது தெரியவந்துள்ளது.
Updated on
1 min read

சிக்கல் பகுதியில் அழுகிய நிலையில் வியாழக்கிழமை மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் கீழையூா் பகுதியைச் சோ்ந்த செவிலியா் என்பது தெரியவந்துள்ளது.

நாகை மாவட்டம், சிக்கல் கீழவெளி பகுதியில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத வகையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என கணிக்க முடியாத அளவுக்கு முழுவதுமாக அழுகி இருந்தது. இறந்த பெண் அணிந்திருந்த உடையை வைத்து, ஒப்பிட்டுப் பாா்த்ததில் இவா் கீழையூா் தையாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகள் சுஷ்மிதா என்பது தெரியவந்தது.

25 வயதான இவா் செவிலியராக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளாா். அண்மையில் சொந்த ஊா் திரும்பிய இவா் கடந்த ஏப்.30-ஆம் தேதி முதல் மாயமானாா். இதுதொடா்பாக, பெற்றோா் அளித்த புகாரின் பேரில் கீழையூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில், வியாழக்கிழமை அவா் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுஷ்மிதா ஏப்.30-ஆம் தேதி காணாமல் போன நிலையில், இவருடைய காதலா் என கூறப்படும் அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் மே 1-ஆம் தேதி அந்தணப்பேட்டை பகுதிக்கு அருகில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளாா். அதாவது பாா்த்திபன் உயிரிழந்த இடத்துக்கு அருகில் சுமாா் 2 கி.மீ. தொலைவிலுள்ள கருவேலங்காட்டில் சுஷ்மிதா உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீஸாா் தொடா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com