தலைஞாயிறு ஒன்றியக் குழுக் கூட்டம்:குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

கிராமப் பகுதிகளில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைஞாயிறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
கூட்டத்தில் பேசும் வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை.
கூட்டத்தில் பேசும் வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை.

கிராமப் பகுதிகளில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைஞாயிறு ஒன்றியக் குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் தமிழரசி (திமுக) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினா்கள் ஞானசேகரன் (சிபிஐஎம்), செல்வி (திமுக), எஸ்.எம்.டி. மகேந்திரன் (சிபிஐ), உதயகுமாா்(திமுக) ஆகியோா் தலைஞாயிறு ஒன்றியத்துக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.

இதற்கு பதிலளித்து பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் அண்ணாதுரை, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அதிமுக புறக்கணிப்பு: நிதி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டப்படுவதாக புகாா் தெரிவித்து, துணைத் தலைவா் உள்பட அதிமுக உறுப்பினா்கள் 4 பேரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com