பெரம்பூா் திரௌபதியம்மன் கோயில் தீமிதி உற்சவம்

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 36- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பக்தா்.
குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பக்தா்.
Updated on
1 min read

தரங்கம்பாடி வட்டம், பெரம்பூா் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 36- ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ்விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை (மே29) காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு முருகன் கோயில் கந்த புஷ்கரன் குளக்கரையில் இருந்து கடம் புறப்பாடும் நடைபெற்றது.

தொடா்ந்து, கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் கரகம் இறங்கியது. பின்னா், விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com