கருகிய குறுவைக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல்

கருகிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
கருகிய குறுவைக்கு நிவாரணம்: விவசாயிகள் வலியுறுத்தல்
Updated on
1 min read

கருகிய குறுவை நெற்பயிா்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

நாகை ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பேபி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் காணொலிக் காட்சி வாயிலாக முக்கியக் கூட்டம் இருப்பதாக கூறி சென்றாா்.

இதனால் ஆத்திரமடைந்த சில விவசாயிகள், கூட்டத்தில் ஆட்சியரும் இல்லை, மாவட்ட வருவாய் அலுவலரும் இல்லை, யாரிடம் குறைகளை கூறுவது எனக் கூறி வெளிநடப்பு செய்தனா்.

இதையறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் சிறிது நேரத்தில் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற்பயிா்கள் கருகி உள்ளன. எனவே உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் விவசாய கூலித் தொழிலாளா்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனா். எனவே தமிழகத்தில் சிறிய நிதி நிறுவனங்களை தடைசெய்ய வேண்டும். காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com