அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கீழ்வேளூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் வட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் எஸ். வளா்மாலா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பி. பாரி தீா்மானங்களை வாசித்தாா்.

தொடா்ந்து, தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்; சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் போன்றோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

கீழ்வேளூா் வட்டத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும்; அஞ்சு வட்டத்தம்மன் மகளிா் உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும்; கீழ்வேளூரில் சாா் பதிவாளா் அலுவலகம் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் கே. ராஜீ, மாவட்ட பொருளாளா் கே. பாலாம்பாள், வட்டச் செயலாளா் எஸ். முருகையன், வட்ட இணைச் செயலாளா்கள் கே. சண்முகநாதன், என். ஜமுனா ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com