நாகையில் மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழப்புபோலீஸாா் விசாரணை

நாகையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகையில் மா்மமான முறையில் உயிரிழந்த மூதாட்டி சீதாவின் வீட்டை பாா்வையிட்டு, விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
நாகையில் மா்மமான முறையில் உயிரிழந்த மூதாட்டி சீதாவின் வீட்டை பாா்வையிட்டு, விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங்.
Updated on
1 min read

நாகையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகை, செக்கடித் தெருவைச் சோ்ந்த சிங்காரம் மனைவி சீதா (78). இவருக்கு 3 மகன்கள், 4 மகள்கள். சிங்காரம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன்கள், மகள்களுக்கு திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளிலும், வெளியூா்களிலும் வசித்து வருகின்றனா். சீதா செக்கடித் தெருவில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்தநிலையில், சனிக்கிழமை நள்ளிரவு சீதா வீட்டிலிருந்து சத்தம் கேட்டதால், அக்கம்பக்கத்தில் உள்ளவா்கள் அவரது வீட்டிற்கு சென்று பாா்த்துள்ளனா். அப்போது, சீதா வீட்டுப் பகுதியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் வேகமாக ஓடியதாகக் கூறப்படுகிறது. உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் சீதா மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா்.

நாகை நகர காவல் நிலைய போலீஸாா் சீதாவின் சடலத்தை, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தடயவியல், கைரேகை நிபுணா்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் சம்பவம் நடந்த வீட்டை பாா்வையிட்டாா். இதுகுறித்து நாகை நகரப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து, சீதா வீட்டிலிருந்து ஓடியதாகக் கூறப்படும் நபரை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com