தரங்கம்பாடி அருகேயுள்ள காலமாநல்லூா், மருதம்பள்ளம் ஊராட்சிகளில் மீனவா்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணை தலைவா் பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஆகியோா் மீனவா்களுக்கு இலவச மனைப்பட்டாக்களை வழங்கினா். இதில், தரங்கம்பாடி வட்டாட்சியா் புனிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.