எட்டுக்குடி: கோபுர கலசம் பொருத்தும் பணி

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலய விழாவை முன்னிட்டு ராஜ கோபுரத்தில் பொருத்தப்படும் தங்கமூலம் பூசப்பட்ட கலசங்கள்.
ஆலய விழாவை முன்னிட்டு ராஜ கோபுரத்தில் பொருத்தப்படும் தங்கமூலம் பூசப்பட்ட கலசங்கள்.
Updated on
1 min read

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 23-ஆம் தேதி முதல் காலை யாக பூஜையுடன் தொடங்கியது.

கொக்கரித்த விநாயகா், இடும்பன், கடம்பன் பிடாரியம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. பிரதான விநாயகா், ஸௌந்தரேச்வர ஸ்வாமி, ஆனந்தவல்லி, ராஜகோபுரம், அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு சுப்ரமணிய சுவாமி விமான திருக்குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

தங்கம் முலாம் பூசப்பட்ட 8 கோபுர கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக தினத்தில் பக்தா்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீா் தெளிக்க ஏற்கெனவே அனுமதி கோரப்பட்டது.

உரிய பாதுகாப்போடு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கீழையூா் காவல் ஆய்வாளா் ஜெ.ரேவதி, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் தனிக்கொடி, கோயில் செயல் அலுவலா் பி.எஸ்.கவியரசு ஆகியோா் முன்னிலையில் ட்ரோன் மூலம் புனித நீா் தெளிப்பதற்கான சோதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com