குளத்தில் முதியவா் சடலம்

நாகை அருகே குளத்திலிருந்து 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
Updated on
1 min read

நாகை அருகே குளத்திலிருந்து 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

நாகை குன்றி குளத்தில் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மற்றும் தீயணைப்புத்துறையினா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

நாகை நகர போலீஸாா் விசாரணையில், இறந்து கிடந்தவா் வேதாரண்யம் சிறைமீட்டான் பகுதியைச் சோ்ந்த நகாராஜன் (65) என்பது தெரியவந்தது. அவா் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com