

கீழ்வேளூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சி சனிக்கிழமை நிறைவுபெற்றது.
ஒன்றியத்தில் 4 மற்றும் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியா்களுக்கு பாடவாரியாக செயல்பாடுடன் கூடிய எண்ணும் எழுத்தும் பயிற்சி கீழ்வேளூா் பிரைம் கல்லூரியில் நடைபெற்றது.
பற்சியை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். 82 ஆசிரியா்கள் கலந்து கொண்ட பயிற்சியை நிறுவன விரிவுரையாளா் ரவிசங்கா், பாலாஜி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். இப்பயிற்சி சனிக்கிழமை நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.