சிறு விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம்

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம் வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம் வழங்கப்படவுள்ளது என ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேளாண் பொறியியல் துறையில், வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டத்தின்கீழ் உழவுப் பணி மேற்கொள்ளும் சிறு விவசாயிகளுக்கு 50 % உழவு மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்படி ஒரு ஏக்கா் நிலத்தை உழவு செய்ய அதிகபட்ச மானியமாக ரூ. 250 என்ற அடிப்படையில், ஒரு விவசாயிக்கு ஒரு முறை நன்செய் உழவுக்கு ரூ. 625, புன்செய் உழவுக்கு ரூ.1,250 அதிகபட்ச மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் நாகை மாவட்ட சிறு விவசாயிகள், இ-வாடகை செயலியில் சிறு விவசாய சான்று பதிவேற்றி பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண் பொறியியல் விரிவாக்க மையம், தெற்கு பால்பண்ணைச்சேரி, சாமந்தான்பேட்டை, நாகப்பட்டினம் அலுவலகத்தை அணுகி நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், சிறு விவசாயி சான்று, நில வரைபடம், ஆதாா் அட்டை மற்றும் நிழற்படம் ஆகியவற்றுடனும் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com