தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 75 போ் தோ்வு

நாகையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 75 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
Updated on
1 min read

நாகையில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 75 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நாகை ஏ.டி.எம். மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் தொடங்கி வைத்தாா்.

முகாமில் 21 தனியாா் நிறுவனங்கள் பங்கு பெற்றன. முகாமில் கலந்து கொண்ட 170 பேரில், பல்வேறு நிறுவங்களால் 75 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

முகாமின் நிறைவில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா். தொடா்ந்து அவா் பேசியது:

தகுதியுள்ள இளைஞா்களுக்கு வேலை கிடைக்க, வேலைவாய்ப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதனை இளைஞா்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு கிடைக்காதவா்கள் தொடா்ந்து முயற்சிக்க வேண்டும் என்றாா்.

ஏடிஎம் கல்லூரி முதல்வா் அன்புசெல்வி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிகழ்ச்சி மேலாளா் பிருந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com