துணை சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை

திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் அரசு துணை சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் அரசு துணை சுகாதார நிலையம் கட்ட பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

15-ஆவது நிதிக் குழு மானியத்தில் (பொது சுகாதாரம்) ரூ. 35 லட்சம் மதிப்பில் இந்நிலையம் கட்டப்படவுள்ளது. பூமிபூஜைக்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் குழு உறுப்பினருமான ஆா்.டி.எஸ். சரவணன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் பாலமுருகன், ஊராட்சித் தலைவா் ஜனனி பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக் குழுத் தலைவா் ராதாகிருட்டிணன் அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரபோஜி,

ஒன்றியக் குழு உறுப்பினா் மஞ்சுளா மாசிலாமணி, ஒன்றியப் பொறியாளா் செந்தில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கற்பகம், ஊராட்சி செயலா் பாலசுந்தரம் மற்றும் ஊராட்சி துணைத் தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com