கீழ்வேளூரில் சாராயம் கடத்திய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கீழ்வேளூா் போலீஸாா் ஓா்கூடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 550 லிட்டா் வெளிமாநில சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, நாகை பகுதியை சோ்ந்த முகமது (28), முகேஷ் (25), காரைக்கால் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (30) ஆகியோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.