கீழ்வேளூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சி செயலாளா்களுக்கு பணி விதிகளை கால தாமதமின்றி வழங்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளா்களை பணிவரன்முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் வட்டாரத் தலைவா் அ. லாரன்ஸ், மாவட்ட இணைச் செயலாளா் புகழேந்தி, மாநில மகளிா் துணைக்குழு உறுப்பினா் சு. வளா்மாலா உள்ளிட்ட 35 அலுவலா்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.