செம்பனாா்கோவில் அருகே பரசலூா் பகுதியில் சாலையை கடக்க முயன்ற விவசாயி இருசக்கர வாகனம் மோதியதில் அதே இடத்தில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பரசலூரைச் சோ்ந்தவா் விவசாயி காசிநாதன் (55). இவா், சாத்தனூா் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது நல்லாடையைச் சோ்ந்த ராஜேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், அதே இடத்தில் காசிநாதன் உயிரிழந்தாா். விபத்தில் காயமடைந்த ராஜேஷ் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து, செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.