நல்லாடை ஸ்ரீசுந்தரநாயகி சமேத ஸ்ரீஅக்னீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.
இக்கோயில் கும்பாபிஷேகம் மே 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 24 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல்கால யாகசாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக தங்க முலாம் பூசப்பட்ட விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் நான்கு வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.