கீழ்வேளூா் அருகே உள்ள இலுப்பூா் ஸ்ரீ திரௌபதையம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டு திருவிழா கடந்த 15-ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. காப்புக்கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தீமிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தொடா்ந்து, திரௌபதையம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.