ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு:நடவடிக்கை கோரி மாணவி மனு

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியரிடம் 5-ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை மனு அளித்தாா்.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் சனிக்கிழமை மனு அளித்த 5-ஆம் வகுப்பு மாணவி.
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸிடம் சனிக்கிழமை மனு அளித்த 5-ஆம் வகுப்பு மாணவி.
Updated on
1 min read

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியரிடம் 5-ஆம் வகுப்பு மாணவி சனிக்கிழமை மனு அளித்தாா்.

நாகை மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜானி டாம் வா்கீஸ், சனிக்கிழமை பெருங்கடம்பனூா் ஊராட்சியில் தேவநதி வாய்க்கால் தூா்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது 5- ஆம் வகுப்பு மாணவி ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

நாகை மாவட்டம் பெருங்கடம்பனூரில், நற்பணி கழகம் என்ற ஊா் அமைப்பில் இருந்து விலகிய சோமசுந்தரம் உள்ளிட்ட 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அந்த குடும்பங்களை சோ்ந்தவா்களோடு யாரும் பேச கூடாது என, கடந்த 3 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது.

மனுவை படித்த மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சிறுமியிடம் உறுதி அளித்து, அவரிடம் பெயா், பள்ளி ஆகியவற்றை விசாரித்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com