மழை பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ ஜெ. முகமது ஷா நவாஸ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ ஜெ. முகமது ஷா நவாஸ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செங்காட்டங்குடி குடியிருப்பு பகுதிகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா். சம்பா, தாளடிநெற்பயிா்களும் மழைநீரில் மூழ்கின.

இந்நிலையில், இப்பகுதியை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷாநவாஸ் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, மழைநீா் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஆா்.டி.எஸ். சரவணன், ஆா். இளஞ்செழியன், ஊராட்சித் தலைவா் வள்ளி கலியமூா்த்தி, ஊராட்சி செயலா் இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com