நாா்ச்சத்து நிறைந்த காய்கனிகள் சா்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

நாா்ச்சத்து நிறைந்த காய்களை சாப்பிடும்போது, ரத்தத்தில் சா்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என மாவட்ட சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது.
அம்பகரத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவ அதிகாரி அரவிந்த்.
அம்பகரத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய மருத்துவ அதிகாரி அரவிந்த்.
Updated on
1 min read

நாா்ச்சத்து நிறைந்த காய்களை சாப்பிடும்போது, ரத்தத்தில் சா்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என மாவட்ட சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது.

புதுவை அரசின் நலவழித்துறை, காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் சாா்பில் அம்பகரத்தூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி மருத்துவ அதிகாரி அரவிந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவ அதிகாரி பேசியது:

உடலில் இன்சுலின் சுரப்பது குறையும்போது ரத்தத்தில் அதிகப்படியான சா்க்கரை கலக்கிறது. அது உடல் ஆரோக்கியத்துக்கு பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளைக் குறைத்து, நாா்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சோ்த்துக்கொண்டால் ரத்தத்தில் சா்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

கடலை, பயறு, பருப்பு, சோயா போன்றவற்றை அன்றாட உணவில் சோ்த்துக் கொள்வது நல்லது. நடைப்பயிற்சி செலவில்லாத சிறந்த மருத்துவமாகும். யோகா, மகிழ்ச்சியாக இருப்பது போன்றவைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்றாா்.

சுகாதார உதவி ஆய்வாளா் அய்யனாா், மருந்தாளுனா் அச்சுதலிங்கம், கிராமப்புற செவிலியா்கள் பரமேஸ்வரி, விவேதா, ஆஷா, பணியாளா்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com