நாகையில் இன்று கலைஞா் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக்.26) மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் கலைஞா் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.
Updated on
1 min read

நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை (அக்.26) மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாள்கள் கலைஞா் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றாண்டு விழா நாயகா் கலைஞா் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவா்களை ஈா்த்தது‘ என்ற தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, வியாழக்கிழமை (அக்.26) காலை 10 மணிக்கு நாகை ஏ.டி.எம் மகளிா்கல்லூரியிலும், பகல் 12 மணிக்கு நாகை சா் ஐசக் நியூட்டன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பிற்பகல் 3 மணி வேதாரண்யம் ஆயக்காரன்புலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (அக்.27) காலை 10 மணிக்கு நாகை இஜிஎஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பகல் 12 மணிக்கு அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பிற்பகல் 3 மணிக்கு நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியிலும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. கருத்தரங்குகளில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தலைமையிலான குழுவினா் பேசுகின்றனா் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com