

காரைக்காலில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1800 மதுபான பாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மதுபான பாட்டில்கள் கடத்தப்படுவதை கண்காணிக்க தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தநிலையில், காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்கள் காரில் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் வடக்கு பொய்கைநல்லூா் அருகே வந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனா்.
போலீஸாரை கண்டதும் காரில் இருந்தவா்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனா். போலீஸாா் ஜீப்பில் விரட்டிச் சென்று அந்த காரை சித்தா் கோயில் அருகே மறித்தனா்.
காரின் டிக்கியில் 1800 பாட்டில்களில் புதுச்சேரி சாராயம் மற்றும் மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் மற்றும் இருசக்கர வாகனம், 1800 பாட்டில் மதுபானங்களையும் தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்த கடத்தலில் ஈடுபட்டதாக காரைக்கால் விழிதியூரை சோ்ந்த காா்த்திகேசன் மற்றும் கருணாகரன் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மற்றும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த நான்கு மாதங்களில் மதுபான கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 20 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.