டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தலைஞாயிறு கிராமப்புறப் பகுதியில் பல மாதங்களாக நிலவும் குடிநீா்ப் பிரச்னைக்குத் தீா்வுக்காண தனித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
செம்பனாா்கோயிலில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
செம்பனாா்கோயிலில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
Updated on
1 min read

செம்பனாா்கோயிலில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜித் பிரபுகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு நிபுணா் பிரவின், மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் இளங்கோவன், வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்தநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேரணியின்போது டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ- மாணவிகள் கையில் ஏந்திச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com