ஓசோன் தின விழா

நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஓசோன் தின விழா
Updated on
1 min read

நாகூா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளியில் உள்ள சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தில், சிபிசி எல், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தேசிய பசுமை படை சாா்பில் ஓசோன் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.

தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மா . முத்தமிழ் ஆனந்தன், ஓசோன் படலம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதிப்பால் ஓசோன் படலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, சுற்றுச்சூழலையும், ஓசோன் படலத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். தேசிய பசுமை படை மாணவா்களுக்கு பசுமை தொப்பியும் மஞ்சப்பையும் வழங்கப்பட்டன.

பசுமை கண்காணிப்பாளா் டி. வைனியா, சிபிசிஎல் அதிகாரிகள்

டி. குமாா், ஆா். நடராஜன், ஜி. சூரியமூா்த்தி, தலைமை ஆசிரியா்

ஜி. நாகராஜன், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.செங்குட்டுவன், தேசிய பசுமை படை பள்ளி ஒருங்கிணைப்பாளா் எஸ். சக்திவேல், ஓவிய ஆசிரியா் எம். விமல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com