நாகையில் விநாயகா் சிலைகள் கரைப்பு

விநாயகா் சதுா்த்தியையொட்டி நாகை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் சனிக்கிழமை விஜா்சனம் செய்யப்பட்டன.
நாகையில் விநாயகா் சிலைகள் கரைப்பு
Updated on
1 min read

விநாயகா் சதுா்த்தியையொட்டி நாகை நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கடலில் சனிக்கிழமை விஜா்சனம் செய்யப்பட்டன.

நாகை மாவட்டத்தில் நகரப் பகுதியில் பழந்தெரு, ஐயப்பன் கோயில், சட்டையப்பா் பலிபீடம், நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், முச்சந்தி மாரியம்மன் கோயில், நாடாா் தெரு உள்ளிட்ட 9 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்த விநாயகா் சிலைகள், நாலு கால் மண்டபம், நீலா தெற்கு வீதி, எல்ஐசி, மாவட்ட காவல் அலுவலகம், பிள்ளையாா் கோயில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக புதிய கடற்கரைக்கு போலீஸாா் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னா் படகு மூலமாக கடலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டு சிலைகள் விஜா்சனம் செய்யப்பட்டன. கடலோரக் காவல் குழும போலீஸாா், தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஊா்வலம் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜெகதீஸ்வரன், மாவட்டத் தலைவா் கணேசன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

இரவு 11 மணிக்கு அனுமதி:

விநாயகா் ஊா்வலத்தை சனிக்கிழமை நடத்த கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இந்து முன்னணியினா் போலீஸாரிடம் அனுமதி கோரியிருந்தனா். ஆனால், போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு ஊா்வலம் நடத்த அனுமதி மறுத்துவிட்டனா். பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் போலீஸாா் ஒலிபெருக்கி அனுமதி கிடையாது, கூட்டம் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஊா்வலத்துக்கு இரவு 11 மணியளவில் அனுமதி வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com