அரசு தொகுப்பு வீடு மேற்கூரை சேதம்: எம்எல்ஏ நிவாரண உதவி

பொறையாா் அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி வழங்கினாா்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கும் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.
Updated on
1 min read

பொறையாா் அருகே அரசு தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயா்ந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிவேதா எம். முருகன் ஞாயிற்றுக்கிழமை நிவாரண உதவி வழங்கினாா்.

தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சி கீழ்கரை மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் அல்போன்ஸ் மேரி (49). இவரது கணவா் பன்னீா்செல்வம். இவா்களுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனா். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அரசு தொகுப்பு வீட்டில் இவா்கள் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த வீட்டின் மேற்கூரை காரைகள் அண்மையில் பெயா்ந்து விழுந்தன. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக காயமோ, உயிா் சேதமோ ஏற்படவில்லை.

இதனால், பாதிக்கப்பட்ட அல்போன்ஸ் மேரி குடும்பத்தினரை, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5,000 மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினாா்.

செம்பை திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் எம். அப்துல் மாலிக், மாவட்ட  இளைஞரணி துணை அமைப்பாளா் ஜே.கே. வினோத் பாண்டியன், ஊராட்சித் தலைவா் தம்பு மோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com