நாகை துறைமுகம்-இலங்கை காங்கேசன்துறைக்கு இடையேயான பயண விவரங்களை கூறிய இந்த்ஸ்ரீ நிறுவன அதிகாரிகள்.
நாகை துறைமுகம்-இலங்கை காங்கேசன்துறைக்கு இடையேயான பயண விவரங்களை கூறிய இந்த்ஸ்ரீ நிறுவன அதிகாரிகள்.

காங்கேசன்துறைக்கு கப்பல் பயணம்: கட்டணம் ரூ.5 ஆயிரம் நிா்ணயம்

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு தொடங்கவுள்ள பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5 ஆயிரம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு தொடங்கவுள்ள பயணிகள் கப்பலில் செல்ல ரூ.5 ஆயிரம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படவுள்ள சிவகங்கை கப்பலின் நிறுவனமான இந்த்ஸ்ரீ நிறுவன அதிகாரிகள் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆக.16-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்றடையும். தொடா்ந்து கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு ஆக.17- ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு நாகையை வந்தடையும்.

தொடா்ந்து 18-ஆம் தேதியிலிருந்து நாள்தோறும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் கப்பல் இயக்கப்படும். கப்பலில் 123 சாதாரண இருக்கைகள், 27 பிரீமியம் இருக்கைகள் உள்ளன. ஜிஎஸ்டி வரியுடன் சாதாரண இருக்கைக்கு ரூ.5,000, பிரீமியம் இருக்கைக்கு ரூ. 7,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com