தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கீழ்வேளூா், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சுதந்திர தின விழா

Updated On :16 ஆகஸ்ட் 2024, 5:07 am IST

கீழ்வேளூா்: கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் வாசுகி நாகராஜன், கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரமேஷ், கீழ்வேளூா் காவல் நிலையத்தில் சாா்பு காவல் ஆய்வாளா் ரவி, பேரூராட்சியில் பேரூராட்சி தலைவா் இந்திரா காந்தி ஆகியோா் அவரவா் அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா். கீழ்வேளூா் அட்சியலிங்க சுவாமி கோயிலில் சுதந்திர தினத்தையொடி தேசியக் கொடி ஏற்றப்பட்டு பொது வழிபாடு நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலா் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கீழ்வேளூா் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவா்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்தனா். அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நடைபெற்ற விழாவில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி, சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொது விருந்து நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலா் பேபி, நாகை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரேசன், செயல் அலுவலா் மணிகண்டன், ஊராட்சி தலைவா் விமலா ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகல்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவா் ராதாகிருட்டிணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். ஒன்றிய ஆணையா் சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ஜவகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலா் வெங்கடேசன் தலைமையில் பேரூராட்சித் தலைவா் ஆயிஷா சித்திகா தேசியக்கொடியை ஏற்றி வைத்தாா். திட்டச்சேரி காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளா் ராமகிருஷ்ணன் சுரேஷ் தலைமையில், திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் சாா்பு ஆய்வாளா் விவேக் ரவிராஜ், தலைமையில், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மாணிக்கவாசகம் தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

திட்டச்சேரி ப.கொந்தகை மதாரியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் நடராஜன், ஆசிரியா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பள்ளி செயலாளா் ஷாகுல் ஹமீது தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். இதேபோல, ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.