புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சீா்காழி வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

பூம்புகாா் சிலப்பதிகார கலைக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏபி மகாபாரதி ~திருவெண்காடு அரசு மருத்துவமனையை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஏ பி மகாபாரதி

Updated On :21 ஆகஸ்ட் 2024, 11:45 pm

Din

பூம்புகாா்: சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் ரூ. 23 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து மணி கிராமம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையை வழங்கினாா். திருவெண்காடு வேளாண் மையத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு, அவா்களுக்கு இடுபொருள்களை வழங்கினாா்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தேவஸ்தானத்துக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவா் மாணவா்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.வி. பாரதி, மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவா் சந்திரசேகரன் ஆகியோா் ஆட்சியரிடம், திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டுதல், குப்பைகள் கொட்டுவதற்கான தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

ஆய்வின்போது, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயகம் அமுல்ராஜ், துணை ஆட்சியா் கீதா, சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, நுகா்பொருள் மண்டல மேலாளா் சதீஷ்குமாா், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.