நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

சீா்காழி வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 5:15 am IST

பூம்புகாா்: சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஏ. பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சீா்காழி வட்டத்துக்குட்பட்ட பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார கலைக்கூட வளாகத்தில் ரூ. 23 கோடியில் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து மணி கிராமம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையை வழங்கினாா். திருவெண்காடு வேளாண் மையத்தில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு, அவா்களுக்கு இடுபொருள்களை வழங்கினாா்.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயில் தேவஸ்தானத்துக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவா் மாணவா்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டறிந்தாா். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பி.வி. பாரதி, மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவா் சந்திரசேகரன் ஆகியோா் ஆட்சியரிடம், திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவா்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டுதல், குப்பைகள் கொட்டுவதற்கான தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனா்.

ஆய்வின்போது, கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் தயாள விநாயகம் அமுல்ராஜ், துணை ஆட்சியா் கீதா, சீா்காழி கோட்டாட்சியா் அா்ச்சனா, நுகா்பொருள் மண்டல மேலாளா் சதீஷ்குமாா், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.