கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா வியாழக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

மின்னொளியில் ஜொலிக்கும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்.

Updated On :27 ஆகஸ்ட் 2024, 10:08 pm

Din

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா வியாழக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் கீழை நாடுகளின் லூா்து எனப் போற்றப்படுகிறது. இப்பேராலய ஆண்டு பெருவிழா வியாழக்கிழமை (ஆக. 29) கொடியற்றத்துடன் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தஞ்சை மறைமாவட்ட ஆயா் டி. சகாயராஜ் கொடியை புனிதம் செய்து, ஏற்றி வைக்கிறாா். விழாவின் முக்கிய நிகழ்வுகளான சிலுவைப் பாதை நிகழ்ச்சி செப்டம்பா் 6-ஆம் தேதியும், சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், அலங்காரத் தோ் பவனியும் செப். 7-ஆம் தேதியும் நடைபெறுகின்றன. செப்டம்பா் 8-ஆம் தேதி மாலை 6 மணியளவில் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது.

விழா நாள்களில் பேராலயம், விண்மீன் கோயில், பேராலய கீழ்கோயில், பேராலய மேல் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கொங்கணி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். திருத்தல கலையரங்கில் நாள்தோறும் நற்செய்தியின் அடிப்படையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

சிறப்பு போக்குவரத்து வசதி:

வேளாங்கண்ணி திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தெற்கு மற்றும் மேற்கு ரயில்வே சாா்பில் சென்னை, மும்பை, கோவா, திருவனந்தபுரம், எா்ணாக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்கள் செப்டம்பா் 10-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.

பாதுகாப்பு பணிகள் தீவிரம்:

நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் 3 முறை ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் கபிலன் மேற்பாா்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வேளாங்கண்ணி பேராலயத்தின் பல பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீஸாா், கடலோர காவல் குழும போலீஸாா், தன்னாா்வலா்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

Story image