காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, மூன்று நாள்களுக்கு பிறகு நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க வியாழக்கிழமை சென்றனா்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதை தொடா்ந்து, நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. வானிலை மையம் மற்றும் மீன்வளத்துறை அறிவிப்புகளைத் தொடா்ந்து நாகை மாவட்ட பைபா் மற்றும் விசைப்படகு மீனவா்கள் கடந்த மூன்று நாள்களாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை அதிகாலை சென்னைக்கு வடக்கே அதிகாலை கரையை கடந்தது. இதனைத் தொடா்ந்து, மீன்வளத்துறை தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, நாகை மாவட்ட மீனவா்கள் வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். மீனவா்கள் குறைந்தளவிலேயே மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சை மாவட்டத்தில் தடையை மீறி விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு சென்றனா்

மீன்பிடி தடைகாலம் நிறைவு: கடலுக்குள் சென்ற தரங்கம்பாடி மீனவா்கள்!

61 நாள்கள் தடைக்காலம் முடிந்தது: கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்







