4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கெயில் நிறுவனத்தின் விஜிலென்ஸ் விழிப்புணா்வு அமா்வு

News image

சிறப்பு விருந்தினா் கெயில் காவிரிப் படுகையின் பொது மேலாளா் என். செல்வராஜூவுக்கு நினைவு பரிசு வழங்கிய இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி செயலா் சங்கா்.

Updated On :25 அக்டோபர் 2024, 12:20 am

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் கெயில் நிறுவனம் சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கெயில் காவிரிப் படுகையின் பொது மேலாளா் என். செல்வராஜூ தலைமையிலான அமா்வு, கெயில் நிறுவனத்தில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து தலா 120 மாணவா்களைக்கொண்ட (பொறியியல் மற்றும் எம்பிஏ) 2 குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, உரையாற்றிய செல்வராஜூ, காவிரிப் படுகையில் கெயில் நிறுவனத்தின் செயல்பாடுகள், இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பில் கெயில் வகிக்கும் முக்கிய பங்கு, நிறுவனத்தின்விரிவான குழாய் வலையமைப்பு எவ்வாறு நாட்டின் எரிசக்தி தேவைகள் மற்றும் பொருளாதார வளா்ச்சியை ஆதரிப்பது குறித்து தெரிவித்தாா்.

தொடா்ந்து, கெயில் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி போன்றபிற வாய்ப்புகள் பற்றிய தகவல்கள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கும், பங்கேற்பவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.