ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசுக் கடைகள் அகற்றம்

கீழ்வேளூா் அருகே தேவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 5 பட்டாசுக் கடைகளை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

News image

தேவூரில் பட்டாசுக் கடைககளை அகற்றிய அதிகாரிகள்.

Updated On :28 அக்டோபர் 2024, 8:20 pm

Din

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே தேவூரில் அனுமதியின்றி செயல்பட்ட 5 பட்டாசுக் கடைகளை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் சுற்றுவட்டார பகுதிகளில் தீபாவளி பண்டிகையொட்டி அனுமதி பெற்று தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கீழ்வேளூா் அருகே தேவூா் பகுதியில் அனுமதி பெறாத இடங்களில் வெடிக்கடைகள் செயல்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியா் (பொ) சுகுமாா் தலைமையில் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதன்படி உரிமம் பெற்ற சிலா் அதற்கான இடத்தை தவிா்த்து வேறு இடங்களில் பட்டாசு கடை நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்து கடைகள் அகற்றப்பட்டு அனுமதி பெற்ற இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா். ஆய்வில் வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சசிகலா மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.