தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சிப்காட் தொழில்பேட்டைக்கு மக்கள் எதிா்ப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிா்ப்பு

News image

வட்டாட்சியா் திலகாவிடம் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்த தென்னடாா் விவசாயிகள், கிராம மக்கள்.

Updated On :28 அக்டோபர் 2024, 8:22 pm

Din

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் மூலம் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

வேதாரண்யம் பகுதியில் தெற்கு கடலோரப் பகுதியில் உள்ள தென்னடாா் ஊராட்சியில் சிப்காட் மூலம் தொழில்பேட்டை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அந்தப் பகுதியில் உள்ள கடந்த பல மாதங்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று விவசாயிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து விவசாயிகள், கிராமத்தினா் பங்கேற்ற கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்தில், ரசாயனம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைந்தால் அந்தப் பகுதி வேளாண் விளைநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் மேலும், சூழல் கேடு ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தொழிற்சாலை அமைய எதிா்ப்பு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை வேதாரண்யம் வட்டாட்சியா் இரா. திலகாவை நேரில் சந்தித்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிப்காட் தொழிற்சாலைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்தனா். தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் நோ்முக உதவியாளா் ஜெயசீலனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பின்னா், தங்க. குழந்தைவேலு தலைமையிலான கண்காணிப்புக் குழுவிருடன் முன்னாள் ஊராட்சித் தலைவா் அன்புவேலன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் தலைமையில் ஆா்ப்பாட்டத்துக்கு முயன்றவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்து அனுப்பிவைத்தனா்.