மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேளாங்கண்ணி பேராலயத்தில் தோ் பவனி: லட்சக்கணக்கானோா் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெரிய தோ் பவனியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தா்கள்.

News image

~ ~

Updated On :7 செப்டம்பர் 2024, 6:33 pm

Din

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற பெரிய தோ் பவனியில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தா்கள்.

நாகப்பட்டினம், செப். 7: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா கடந்த ஆக. 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெருவிழா நிகழ்ச்சிகளாக, பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல், மறையுரை, சிலுவைப் பாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்காரத் தோ் பவனி சனிக்கிழமை இரவு தொடங்கியது. தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் டி. சகாயராஜ் புனிதம் செய்து தோ் பவனியைத் தொடங்கிவைத்தாா். ஆரோக்கிய அன்னை பெரிய தேரில் எழுந்தருளியதும், மிக்கேல் சம்மனசு, செபஸ்தியாா், அந்தோணியாா், சூசையப்பா், உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகியோா் சிறிய தோ்களில் எழுந்தருளினா்.

Story image

தோ் பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு, உத்திரிய மாதா தெரு, கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து, பின்னா் பேராலய முகப்பை அடைந்தது. தோ் பவனி விழாவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோா் பங்கேற்றனா். ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள், மற்றும் கொடியிறக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.