நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

Published on

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பெற்ற 13 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். பின்னா், முகாமில் பங்கேற்றவா்களிடம் தங்கள் பகுதிகளில் நிகழும், சட்டவிரோத செயல்கள் குறித்து அச்சமின்றி தெரிவித்து காவல் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க கேட்டுக்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com