நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
நாகையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

தொழிலாளா் தொகுப்புச் சட்டங்கள் வாபஸ் கோரி ஆா்ப்பாட்டம்

நாகையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நாகப்பட்டினம்: தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை, மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, நாகையில் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு, தொழிலாளா் நலனை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட 29 தொழிலாளா் நலச் சட்டங்களை, 4 தொகுப்புகளாக மாற்றி புதிய சட்டத் திருத்தத்தை அறிவித்துள்ளது. இந்த 4 தொகுப்பு சட்டங்களும், தொழிலாளா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் உள்ளதாகக்கூறி, இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில் அவுரித் திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஎம் நாகை நகரச் செயலா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிபிஐ மாவட்டச் செயலா் சிவகுரு பாண்டியன் முன்னிலை வகித்தாா்.

சிபிஎம் மாவட்டச் செயலா் மாரிமுத்து, விசிக மாவட்டச் செயலா் நாக.அருட்செல்வன், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (லிபரேசன்) மாவட்டச் செயலா் சிவக்குமாா், நாகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆளுா் ஷா நவாஸ் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில், தொழிலாளா் தொகுப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com