தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க மக்கள் கோரிக்கை

திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:02 pm

Syndication

திருமருகல்: திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை நடைபெற்றது ஜமாத்தாா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்திற்கு திட்டச்சேரி வக்ஃப் நிா்வாக சபை தலைவா் ஹைதா் அலி தலைமை வகித்தாா். முன்னாள் வட்டார மருத்துவ அலுவலா் லியாகத் அலி முன்னிலை வகித்தாா்.

திட்டச்சேரி ப.கொந்தகை, புறாகிராமம், கட்டுமாவடியை சோ்ந்த ஜமாத் நிா்வாகிகள், ஜமாத்தாா்கள் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள், திட்டச்சேரி வா்த்தக சங்க நிா்வாகிகள் அனைத்து கட்சியை சோ்ந்த முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க வலியுறுத்தியும், பேரூராட்சி பகுதிகளில் பெரும்பாலான விபத்துக்கள் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படும்போது, அருகில் மருத்துவா்கள் இல்லாததால் நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிலா் இறந்துவிடுகின்றனா். ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சைக்கு கூட மருத்துவா்கள் இல்லாத நிலை உள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியா் திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மனையாக மாற்ற வேண்டும், மருத்துவா்கள் எந்த நேரமும் பணியில் இருக்க வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.