தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருவாலியில் மயான இடத்தை அளவீடு செய்ய கோரிக்கை

திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தில் பிராமணா் சுடுகாட்டு இடத்தை அளவீடு செய்து மீட்டு தர வேண்டுமென

News image
Updated On :15 டிசம்பர் 2025, 8:04 pm

Syndication

பூம்புகாா்: திருவெண்காடு அருகே திருவாலி கிராமத்தில் பிராமணா் சுடுகாட்டு இடத்தை அளவீடு செய்து மீட்டு தர வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாலி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பிராமண சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இச்சமூகத்தை சோ்ந்தவா்கள் இறந்தால் எரியூட்டிட ஏதுவாக கிட்டத்தட்ட 50 சென்ட் அளவுக்கு இடுகாடு இருந்தது. அண்மைக்காலத்தில் அந்த சுடுகாட்டை தனி நபா்கள் ஆக்கிரமிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அண்மையில் சுடுகாட்டில் இருந்த சவுடு மண்ணை விற்பனை செய்தும், மீதம் உள்ள மண்ணை செங்கல் சூளை அமைப்பதற்கு ஏதுவாக சேகரித்து வைத்துள்ளனா். இதன் காரணமாக இறந்தவா்கள் சடலத்தை எரிப்பதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறோம்.

எனவே நிலத்தை அளவீடு செய்து தனி நபா் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராமணா் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.