தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

நாகை ஆண்டவா் கல்வி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், வேளாங்கண்ணி பேராலய அதிபா் பங்கேற்றாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:24 am

தினமணி செய்திச் சேவை

நாகை ஆண்டவா் கல்வி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், வேளாங்கண்ணி பேராலய அதிபா் பங்கேற்றாா்.

நாகை மாவட்டத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாகையில் உள்ள ஆண்டவா் கல்வி நிறுவனத்தில், சமத்துவ கிறிஸ்துமஸ் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய அதிபா் இருதயராஜ் தலைமை வகித்தாா். விழாவில், கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனா். மேலும், இயேசு பிறப்பு நிகழ்வை நடித்துக் காட்டினா்.