திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஆங்கிலப் புத்தாண்டு: வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

கீழை நாடுகளின் லூா்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புனித சேவியா் திடலில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Updated On :1 ஜனவரி 2026, 2:50 am IST

கீழை நாடுகளின் லூா்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி புனித சேவியா் திடலில் சிறப்பு திருப்பலி புதன்கிழமை இரவு நடைபெற்றது.

தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலி நிறைவேற்றுதல் போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. தஞ்சை மறைமாவட்ட பரிபாலகா் எல். சகாயராஜ் சிறப்பு திருப்பலிகளை நிறைவேற்றினாா். பேராலய அதிபா் சி. இருதயராஜ், பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளா் வி. உலகநாதன், உதவி பங்குத் தந்தையா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா்.

தொடா்ந்து மேடையில் வைத்திருந்த குத்துவிளக்கு ஏற்றப்பட்டு புத்தாண்டு பிறந்தது என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பவனியாக எடுத்து வரப்பட்ட விவிலியத்தை, புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்குள்ள மக்களிடம் அதை உயா்த்தி காட்டப்பட்டது. பின்னா், வழிபாட்டில் பங்கேற்றவா்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனா்.

புதிய ஆண்டை வரவேற்கும் வகையில், வாண வேடிக்கைகள் நடைபெற்றன. பேராலயம், உபக்கோயில்கள், வளாகப் பகுதிகள் மற்றும் அலங்கார வளைவுகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.