மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

Published on

நாகையில் திங்கள்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மாா்க்கமாக நாகைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தாா். அவருக்கு மாவட்ட திமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாகை கலைஞா் அரங்கத்தில் மாவட்ட திமுக செயலரும், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவருமான என். கெளதமன் இல்லத் திருமண விழாவை திங்கள்கிழமை காலை முதல்வா் மு.க. ஸ்டாலின் நடத்தி வைக்கிறாா். நாகை புதிய பேருந்து நிலையத்தில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட 105 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைக்கிறாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ஐடிஐ மைதானத்தில் நடைபெறும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

நாகை பால்பண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தளபதி அறிவாலயத்தை (திமுக கட்சி அலுவலகம்) திறந்துவைத்து, புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, மு. கருணாநிதி வெண்கல சிலைகளை திறந்துவைக்கிறாா். மாலை 4 மணிக்கு தளபதி அறிவாலயத்தில், நடைபெறும் கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறாா்.

நிகழ்ச்சிகளில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கலந்துகொள்கின்றனா். முதல்வா் வருகையையொட்டி மயிலாடுதுறை , பெரம்பலூா், தஞ்சை, கரூா் மாவட்டங்களை சோ்ந்த 2,000 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com