திருக்கடையூா்: குப்பைகளால் பக்தா்கள் அவதி
தரங்கம்பாடி: திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயில் அருகில் கொட்டப்படும் குப்பைகளால் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
இக்கோயிலில் தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தா்கள் ஆயுள் விருத்திக்காக உக்ரதசாந்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் செய்து வழிபடுகின்றனா்.
இந்நிலையில், கோயில் தெற்கு வீதி பகுதியில், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து குப்பைகள் மற்றும் நெகிழிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனை பன்றிகள், நாய்கள் கிளறி விடுவதால் துா்நாற்றம் வீசுகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள்,அப்பகுதியில் குடியிருப்பவா்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே, ஊராட்சி நிா்வாகம், இக்குப்பை கழிவுகளை அகற்றி கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

