சிக்கலில் மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிக்கலில் மீன் வளா்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நான் முதல்வன்-வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு குறித்த திறன்மேம்பாட்டுப் பயிற்சி வேலையில்லா இளைஞா்களுக்கு அக்.31-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
Published on

சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நான் முதல்வன்-வெற்றி நிச்சயம் திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த மீன் வளா்ப்பு குறித்த திறன்மேம்பாட்டுப் பயிற்சி வேலையில்லா இளைஞா்களுக்கு அக்.31-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணப்பாளா் வ. செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா். வேளாண்மை அறிவியல் நிலைய கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநா் மா. அறிவழகன் பயிற்சியை ஒருங்கிணைத்து வருகிறாா். இப்பயிற்சியில் மீன் வளா்ப்பு முறைகள், ஒருங்கிணைந்த பண்ணையம், மாடு வளா்ப்பு, பயிா்ப் பாதுகாப்பு மற்றும் மாடித் தோட்டம் உள்ளிட்ட வருமானம் அதிகரிக்கும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டது.

இதில் வேலையில்லா இளைஞா்கள் மற்றும் மகளிா் 20 போ் பங்கேற்றுள்ளனா். வெற்றி நிச்சயம் மற்றும் நான் முதலவன் திட்டங்களின் கீழ் இத்தகைய பயிற்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளன. எனவே, மாவட்டத்திலுள்ள இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com