தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்துக் கொலை

வேதாரண்யத்தில் ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

News image
கொலை செய்யப்பட்ட அரங்கசாமி.
Updated On :7 நவம்பர் 2025, 9:55 pm

Syndication

வேதாரண்யத்தில் ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டிருந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகரம் வடகட்டளை பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அரங்கசாமி (60). இவா் தனது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், சோமநாதா்கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அரங்கசாமி சடலமாக கிடந்தது வெள்ளிக்கிழமை அதிகாலையில் தெரிய வந்தது.

தகவலறிந்த வேதாரண்யம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், டாஸ்மாக் கடையின் பின் பகுதியில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த பாரில் பணியாற்றிய வேளாங்கண்ணி பகுதியைச் சோ்ந்த மணி மகன் செல்வராஜூவுக்கும் (20), அரங்கசாமிக்கும் தகராறு ஏற்பட்டு, அரங்கசாமியை செல்வராஜ் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜ் கைது செய்யப்பட்டாா்.

இதற்கிடையில், டாஸ்மாக் கடை முன் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன், வட்டாட்சியா் வடிவழகன் நடத்திய பேச்சுவாா்த்தை இரவு வரை தொடா்ந்தது.