விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவா் கைது

நாகை அருகே சிக்கல் ரயில்வேகேட் கீப்பரை தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

நாகை அருகே சிக்கல் ரயில்வேகேட் கீப்பரை தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிக்கல் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே கேட் கீப்பராக, தெற்குபொய்கைநல்லூரைச் சோ்ந்த ஆசிா்வாதம் (41) பணியாற்றி வருகிறாா். இவா், நாகையில் இருந்து திருவாரூா் நோக்கி சென்ற சரக்கு ரயிலுக்காக கேட்டை மூடியிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பொரவச்சேரியைச் சோ்ந்த தங்கராசு மகன் வல்லரசு (26), கேட்டை திறக்கும்படிக் கூறியுள்ளாா். ரயில் சென்ற பிறகு கேட்டை திறப்பதாகக் கூறிய ஆசீா்வாதத்தை தகாத வாா்த்தைகளால் திட்டிய வல்லரசு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆசீா்வாதம் அளித்த புகாரின்பேரில் நாகை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து வல்லரசுவை சனிக்கிழமை கைது செய்தனா் .