இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பழைமை வாய்ந்த கோயிலை சீரமைக்க கோரிக்கை

கீழையூரில் சுமாா் 1,050 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கீழையூரில் உள்ள பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயில்.
Updated On :22 நவம்பர் 2025, 6:43 pm

Syndication

கீழையூரில் சுமாா் 1,050 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைலாசநாதா் கோயிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீழையூரில் பஞ்சபாண்டவா்கள் வனவாசத்தில் இருந்தபோது தா்மா் வழிபட்ட தலமான கைலாசநாதா் கோயில் உள்ளது. யவனா்கள் தங்கி வணிகம் செய்ததற்கான சான்று கல்வெட்டில் உள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள மூன்று கைலாசநாதா் கல்வெட்டு கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

சுமாா் 1,050 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் மிகவும் சிதிலடைந்து உள்ளே யாரும் சென்று பூஜை செய்ய முடியாத நிலையில் இருந்தது.

கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஜோலாா்பேட்டை திரு ஆரூரான் உழவாரத் திருப்பணி அறக்கட்டளை குழுவைச் சோ்ந்த 60 சிவனடியாா்கள் உழவாரப் பணி வாயிலாக மரங்களை வெட்டி, முட்புதா்களை நீக்கி உள்ளே சென்று பூஜை செய்யும் வகையில் ஏற்பாடு செய்துள்ளனா்.

இக்கோயிலில் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இக்கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.