வீடுதேடி ரேஷன் பொருள்கள்

நாகை மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தில், வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
Published on

நாகை மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தில், வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ், 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி, டிசம்பா் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com