வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வீடுதேடி ரேஷன் பொருள்கள்

நாகை மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தில், வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:40 pm

Syndication

நாகை மாவட்டத்தில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தில், வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் பொருள்கள், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ், 65 வயதிற்கும் மேற்பட்டோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே விநியோகம் செய்யப்படுகிறது.

அதன்படி, டிசம்பா் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. தகுதியுடைய குடும்ப அட்டைதாரா்கள் மேற்கண்ட திட்டத்தினை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளாா்.