சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாகை ஒன்றியம், பொரவச்சேரி தண்டபாணி கோயில் பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (29 ). கம்பி பிட்டரான இவா் புதன்கிழமை இரவு நாகை- திருவாரூா் புறவழிச் சாலை சிக்கல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே கீழ்வேளூா் அருகே கூத்தூா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த சபரிநாதன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், விக்னேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விக்னேஷ் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com