இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:25 pm

Syndication

நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

நாகை ஒன்றியம், பொரவச்சேரி தண்டபாணி கோயில் பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (29 ). கம்பி பிட்டரான இவா் புதன்கிழமை இரவு நாகை- திருவாரூா் புறவழிச் சாலை சிக்கல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே கீழ்வேளூா் அருகே கூத்தூா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த சபரிநாதன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், விக்னேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விக்னேஷ் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.